கோவையில் கால்நடை கணக்கெடுப்பு: பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2024-ல் தொடங்கும் 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோரியுள்ளார். கணக்கெடுப்பு பணிக்கு 234 கணக்கெடுப்பாளர்களும், 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (செப்டம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை கணக்கெடுப்பு பணி குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

கால்நடை கணக்கெடுப்பு பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கால்நடைகள் தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலம் பேணுவதற்கான சரியான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பில் வீடுகள், கடைகள், தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு இதற்காக உருவாக்கப்பட்ட செயலியின் மூலம் கைபேசியில் பதிவு செய்யப்படும்.

தற்போது நாடு தழுவிய 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி அக்டோபர் 2024 மாத ஆரம்பத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பணிக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 234 கணக்கெடுப்பாளர்களும், அவர்களின் பணியை கூர்ந்தாய்வு செய்ய 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இத்திட்டப் பணி தொடர்பான பயிற்சிகள் பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கும் கால்நடை கணக்கெடுப்புப் பணி குறித்த விவரங்களை சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...