கோவை 54வது வார்டில் குடிநீர் பிரச்சனை: கிழக்கு மண்டல தலைவர் நேரடி ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 54வது வார்டில் குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் 54வது வார்டில் உள்ள மதுரை வீரன் கோவில் பகுதியில் குடிநீர் மற்றும் உப்பு நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது அவர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பிரச்சனைகளை சரிசெய்யுமாறு வலியுறுத்தினார்.



குறிப்பாக, உப்பு நீர் மற்றும் குடிநீர் விநியோகத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது பகுதிச் செயலாளர் சிவா MC, வட்டச் செயலாளர் ஆனந்த், உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், கொங்கு பேரவை தனபால், ஆடிட்டர் சசிகுமார், சூயஸ் தியாகு, சானிடரி சூப்பர்வைசர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

மண்டல தலைவரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் உடனடி நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...