அண்ணா பாணியில் திமுக நிர்வாகிக்கு தங்க மோதிரம் அணிவித்த நீலகிரி எம்பி ஆ ராசா

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில், 90 சதவீதம் வாக்குகள் பெற்றுத் தந்த திமுக நிர்வாகிக்கு நீலகிரி எம்பி ஆ ராசா தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார். மக்களுக்கு நன்றி தெரிவித்து உண்மையாக பணியாற்ற உறுதியளித்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில், நீலகிரி எம்பி ஆ ராசா, தனக்கு ஒரே பூத்தில் 90 சதவீத வாக்குகள் வாங்கிக் கொடுத்த திமுக நிர்வாகிக்கு தங்க மோதிரத்தை அணிவித்து பாராட்டினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா, மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட ஓடந்துறை, சங்கர் நகர் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் சென்று, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி 15வது வார்டு பகுதியில் மட்டும் பதிவான 925 வாக்குகளில், 826 வாக்குகள் திமுகவுக்கு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பான செயல்பாட்டிற்காக, 29வது பூத்தில் பணியாற்றிய திமுக நகர செயலாளர் முகமது யூனிசுக்கு, பேரறிஞர் அண்ணாவின் முறைப்படி தொண்டருக்கு மோதிரம் அணிவித்து கௌரவப்படுத்தும் பாலிசியின் படி, ஆ ராசா தங்க மோதிரத்தை பரிசளித்து பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆ ராசா, "கடந்த முறை காட்டிலும் கூடுதலான வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ள மக்களுக்கு உண்மையாக நாடாளுமன்றத்தில் பணியாற்றுவேன்" என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...