தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: டாஸ்மாக் கடை சீல் வைப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை புகார் அடிப்படையில் காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. அதிகாரிகள் டாஸ்மாக் கடையை சீல் வைத்தனர். வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூரில் இருந்து நரசிபுரம் செல்லும் சாலையில் அதிகாலைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 22) காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார் முழுவதையும் தகர தகடுகளைக் கொண்டு மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.



பேரூர் தாசில்தார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அவர், டாஸ்மாக் பார் கடையின் ஊழியர்கள் படுத்து உறங்க வைத்திருந்த இரண்டு வயர் கட்டில்களை எடுத்து ஒன்றிணைத்து, அதில் கம்பி கட்டி பூட்டி சீல் வைத்தார். இந்த வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டதை பார்த்த மது பிரியர்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றனர்.

உயர் அதிகாரிகள் தகர தகடுகளை முழுவதுமாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், படுத்து உறங்கும் வயர் கட்டில் வைத்து மூடி சீல் வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வித்தியாசமான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நடவடிக்கை சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...