கலைஞர் புத்தக விநியோக வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜரானார். 2014ல் கலைஞரின் புத்தகத்தை விநியோகித்தபோது அதிமுக மன்றத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), சனிக்கிழமை (21.09.2024) காலை கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜரானார். 2014ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அதிமுக மன்றத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது.

இந்த சம்பவம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது. புத்தக விநியோகத்தின் போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், அதன் பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை அடித்து உடைத்ததாகவும், அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாகவும் நா.கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை பொய் வழக்கு என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.



நீதிமன்றத்திற்கு வந்த நா.கார்த்திக்குடன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



மேலும், மாநகர மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கே.ஆர்.ராஜா, பல்வேறு வட்டக்கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...