உடுமலையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்

உடுமலையில் பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பேசியதாக குற்றம் சாட்டினர்.



திருப்பூர்: உடுமலையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்திய தேர்தல் நடைமுறை குறித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த தர்விந்தர் சிங் மர்வா, சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் கெய்க்வாட், உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த எச்.ராஜா ஆகியோர் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கலவரத்தை தூண்டிவிடும் நோக்கத்திலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்திலும் அமைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை நகர காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், கிட்டுசாமி, உடுமலை நகர மன்ற 4-வது வார்டு உறுப்பினர் கலைவாணி, எஸ்.முருகன், வக்கீல் வெற்றிவேல் குமார், பொன் பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...