தற்காப்புக்காக ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கிச் சூடு: கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம்

கோவையில் ரவுடி ஆல்வின் காவலர் மீது கத்தியால் தாக்கியதால், தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.



கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது, இன்று அதிகாலை கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் சுட்டுப் பிடிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.



ஆல்வின் மீது 3 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் இருப்பதாக தெரிவித்த காவல் ஆணையர், கடந்த ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆல்வின் மீது NBW (Non-bailable Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். இதையடுத்து, மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ஆல்வினை தேடி வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரை பிடிக்கச் சென்ற போது தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடிசியா பகுதியில் ஆல்வினை காவலர்கள் பிடிக்க முற்பட்டபோது, அவர் தலைமை காவலர் ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதாக காவல் ஆணையர் கூறினார். இதனையடுத்து, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆல்வினை காலில் சுட்டதாகவும் தெரிவித்தார். தற்போது காயம் பட்ட தலைமை காவலரும் சுடப்பட்ட குற்றவாளியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...