கோவை: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கோவை வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தின் வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.

பெரியநாயக்கன்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சுதன் சாய், கை மற்றும் கால்களில் குறைபாடுகளுடன் பிறந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று (20.09.2024) மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சுதன் சாய்க்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்வில் தாட்கோ மேலாளர் கு.மகேஸ்வரி உடனிருந்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...