உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் எத்தலப்ப நாயக்கர் கோவிலில் பாரம்பரிய தேவராட்டம்

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள எத்தலப்ப நாயக்கர் கோவிலில் வருடாந்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாரம்பரிய தேவராட்டம், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள எத்தலப்ப நாயக்கர் திருக்கோவிலில் வருடாந்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய எத்தலப்ப நாயக்கரின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.



புரட்டாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், எத்தலப்ப நாயக்கர் வம்சாவழியினர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்கின்றனர்.



இந்த ஆண்டு விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

முதலில், எத்தலப்ப நாயக்கரின் குலதெய்வமான ஜக்கம்மாளுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்டவை அடங்கும். தொடர்ந்து, எத்தலப்ப நாயக்கர், அவரது துணைவியார், படைத் தளபதிகள் மற்றும் போர் வீரர்களின் சிலைகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஜக்கம்மாள், எத்தலப்ப நாயக்கர், அவரது துணைவியார் ஆகியோரின் சிலைகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக, பாரம்பரிய இசைக்கருவியான உருமியின் ஒலியுடன் தேவராட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எத்தலப்ப நாயக்கரின் வம்சாவழியினர் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...