கோவையில் திருமண வாக்குறுதி அளித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது வழக்கு

கோவையில் 20 வயது இளம்பெண்ணுக்கு திருமண வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த அஸ்வத்குமார் என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

அஸ்வத்குமார் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து கோவைக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த சமயங்களில் அவர் பலமுறை இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பின்னர் இளம்பெண் திருமணம் செய்ய வற்புறுத்திய போது அஸ்வத்குமார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செப்டம்பர் 19 அன்று புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஸ்வத்குமாரை தேடி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அறிமுகமில்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...