நிபா வைரஸ் தடுப்பு: கோவை-கேரள எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக, கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வாகனங்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்கி ஒரு வாலிபர் இறந்ததைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபனாரி மற்றும் முள்ளி பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

டாக்டர் பிரவீன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழுவில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா, இரண்டு நர்சுகள் மற்றும் ஒரு மருந்தாளுநர் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர்.

காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், வாகனங்களில் வரும் பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்படுகின்றன.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...