நிபா வைரஸ் தடுப்பு: கோவை-கேரள எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக, கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வாகனங்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்கி ஒரு வாலிபர் இறந்ததைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கோவை மாவட்டத்தின் காரமடை பகுதியில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபனாரி மற்றும் முள்ளி பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

டாக்டர் பிரவீன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழுவில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா, இரண்டு நர்சுகள் மற்றும் ஒரு மருந்தாளுநர் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர்.

காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், வாகனங்களில் வரும் பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்படுகின்றன.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...