பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணி: கோவை ரயில்கள் 92 நாட்கள் நிற்காது

பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கோவை உட்பட சில ரயில்கள் செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை 92 நாட்களுக்கு அங்கு நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் மும்பை லோக்மானியா திலக் - கோவை ரயில் (எண்: 11013), கோவை - லோக்மானியா திலக் ரயில் (எண்: 11014), பெங்களூரு - எர்ணாகுளம் ரயில் (எண்: 12677), எர்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ரயில்வே துறை பயணிகளுக்கு முன்கூட்டியே இந்த தகவலை தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயண திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...