பொள்ளாச்சி நகராட்சி: வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் - கமிஷனர் எச்சரிக்கை

பொள்ளாச்சி நகராட்சி வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இக்காலத்திற்குள் வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கணேசன் எச்சரித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் வரி செலுத்தத் தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில் ஆண்டுக்கு 33.77 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள், கட்டணம், மற்றும் வாடகை உள்ளிட்டவை காலக்கெடுவிற்குள் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 28 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரி நிலுவையில் உள்ளது. இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், "சொத்து வரி முதல் அரையாண்டுக்கு ஏப்ரல் மாதமும், இரண்டாம் அரையாண்டுக்கு அக்டோபர் மாதமும் செலுத்தி, ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறலாம். முதல் அரையாண்டுக்கு சொத்து வரி செப்டம்பர் மாதத்துக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கு மார்ச் மாதத்திற்குள்ளும் வரிகளை நிலுவை இன்றி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறியவர்களின் பெயர்கள் பொது இடங்களில் பெயர் பலகைகளில் வெளியிடப்படும். அதன் பின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும், குடியிருப்பு வரி செலுத்திக் கொண்டு வணிக நோக்கத்தில் பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

"இவர்கள் தாங்களாகவே முன்வந்து முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள, 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரி செலுத்தக்கூடிய கட்டடத்தை யார் உபயோகப்படுத்துகிறார்களோ, அவர்களிடமிருந்தும் வரி வசூல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது," என்று கமிஷனர் கூறினார்.

காலி மனை வரி நிலுவை வைத்திருந்தால், அந்த விபரங்கள் பத்திரப்பதிவு துறைக்கு தெரிவிக்கப்பட்டு அம்மனைகள் பதிவு மேற்கொள்ள தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக வரியை செலுத்தி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...