பொள்ளாச்சி நகராட்சி: வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் - கமிஷனர் எச்சரிக்கை

பொள்ளாச்சி நகராட்சி வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இக்காலத்திற்குள் வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கணேசன் எச்சரித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் வரி செலுத்தத் தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில் ஆண்டுக்கு 33.77 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள், கட்டணம், மற்றும் வாடகை உள்ளிட்டவை காலக்கெடுவிற்குள் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 28 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரி நிலுவையில் உள்ளது. இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், "சொத்து வரி முதல் அரையாண்டுக்கு ஏப்ரல் மாதமும், இரண்டாம் அரையாண்டுக்கு அக்டோபர் மாதமும் செலுத்தி, ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறலாம். முதல் அரையாண்டுக்கு சொத்து வரி செப்டம்பர் மாதத்துக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கு மார்ச் மாதத்திற்குள்ளும் வரிகளை நிலுவை இன்றி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறியவர்களின் பெயர்கள் பொது இடங்களில் பெயர் பலகைகளில் வெளியிடப்படும். அதன் பின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும், குடியிருப்பு வரி செலுத்திக் கொண்டு வணிக நோக்கத்தில் பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

"இவர்கள் தாங்களாகவே முன்வந்து முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள, 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரி செலுத்தக்கூடிய கட்டடத்தை யார் உபயோகப்படுத்துகிறார்களோ, அவர்களிடமிருந்தும் வரி வசூல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது," என்று கமிஷனர் கூறினார்.

காலி மனை வரி நிலுவை வைத்திருந்தால், அந்த விபரங்கள் பத்திரப்பதிவு துறைக்கு தெரிவிக்கப்பட்டு அம்மனைகள் பதிவு மேற்கொள்ள தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக வரியை செலுத்தி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...