பொள்ளாச்சி நகராட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கள ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். வார்டுகளில் நேரடி ஆய்வு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி.



கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகராட்சி நிர்வாக அதிகாரிகள், நகர மன்ற தலைவர் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒவ்வொரு வாரமும் பிரதி செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு அவ்வப்போது தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நேரடியாக தினசரி 3 வார்டுகள் வீதம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 1, 2, 3 வார்டுகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.





இந்த ஆய்வின் போது, வடுகபாளையம் நடுநிலைப் பள்ளியில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பள்ளி வகுப்பறை, கழிப்பிடம், சமையலறை கூடம் மற்றும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.



மேலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தேவையற்ற செடிகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...