உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் நிபா வைரஸ் சோதனை செய்யாத சுகாதாரத் துறை

உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் நிபா வைரஸ் பரிசோதனை செய்யாததால் தமிழகத்தில் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.



Coimbatore: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இளைஞர் ஒருவர் பலியான நிலையில், கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதியில் சுகாதாரத் துறையினர் வாகன ஓட்டிகளை பரிசோதித்து வருகின்றனர். ஆனால், உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையான ஒன்பதாறு சோதனை சாவடியில் சுகாதாரத் துறையினர் நிபா வைரஸ் பரிசோதனை பணிகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனால் தமிழகத்திற்குள் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். உடுமலை-மூணாறு சாலை வழியாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாள்தோறும் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர்.



கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை-மூணார் சாலையில் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோய் தொற்றுடன் வருகின்ற நபர்களால் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் தொடர வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய் வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட வரும் முன்பு காப்பதே சிறந்த வழிமுறையாகும் என்றும், பாதுகாப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஒன்பதாறு சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட வேண்டியது அவசியமாக உள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையான அறிவிப்பு வரவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...