உலக சிலம்பம் சாம்பியன்ஷிப்பில் கோவை அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

கேரளாவில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் துரை ஆனந்த் மற்றும் லியாஸ்ரீ தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.


Coimbatore: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஜிம்மி ஜார்ஜ் உள்விளையாட்டு அரங்கில் கடந்த செப்டம்பர் 4 முதல் 6 வரை நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் துரை ஆனந்த், 60-65 கிலோ ஜூனியர் பிரிவில் (ஸ்டிக் பைட்) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல், அதே பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி லியாஸ்ரீ, 40-44 கிலோ சப் ஜூனியர் பிரிவில் (ஸ்டிக் பைட்) தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற இரு மாணவர்களையும் பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) சாந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயலட்சுமி மற்றும் சேகர் ஆகியோர் பாராட்டினர். மேலும், பள்ளியின் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சாதனை மூலம் கோவை மாநகரின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் மேலும் ஒரு மைல்கல் படைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனை படைத்திருப்பது பெருமிதம் அளிக்கிறது.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...