கோவையில் மிலாடி நபி விழா: இஸ்லாமியர்கள் ஊர்வலம், சிறுவர்கள் நடனம்

கோவையில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர். நபிகள் நாயகத்தின் வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர்.



கோவை: கோவையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். உலகம் முழுவதும் நபிகள் நாயகம் பிறந்த நாளை மிலாடி நபி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கோவையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.



இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன. குறிப்பாக, செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர்.



இஸ்லாமிய சிறுமிகள் மிலாடி நபி கொடி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், நபிகள் நாயகம் இஸ்லாமியர்களுக்கு வகுத்த வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர். உலக மக்கள் பாகுபாடு இன்றி நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும், சாதி மத பேதம் இன்றி ஏழை பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்தனர்.

இமாம்கள் பேசுகையில், "நபிகள் நாயகம் எடுத்துரைத்த வாழ்வியல் நெறிமுறைகளை உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...