மேட்டுப்பாளையத்தில் 1500 மதரசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம்; இந்து சமுதாய நலச்சங்கம் வரவேற்பு

மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு 1500 மதரசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. இந்து சமுதாய நலச்சங்கம் குளிர்பானம் வழங்கி வரவேற்றது.



கோவை: மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாளை ஒட்டி 1500 மதரசா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது.

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பெரிய பள்ளி வாசல் பகுதியில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜயூப் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதனையடுத்து உதகை சாலை, பேருந்து நிலையம், அண்ணாஜீராவ் சாலை என மேட்டுப்பாளையத்தின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்த மிலாது நபி ஊர்வலம் வலம் வந்து மீண்டும் பெரிய பள்ளிவாசலில் நிறைவடைந்தது.

60 மதரசா பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு "நபிகள் நாயகம் வழி நடப்போம்", "இந்தியா எங்கள் தாய்நாடு", "இஸ்லாம் எங்கள் வழிபாடு" என்ற கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.



இந்த மிலாது நபி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலம் வந்த இஸ்லாமிய பள்ளி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளுக்கு மேட்டுப்பாளையம் இந்து சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம் உள்ளிட்டவைகளை வழங்கி வரவேற்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...