கோவையில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். GST கூட்டத்தில் தொழில்முனைவோரை அவமானப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


Coimbatore: கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில், திமுக மற்றும் இந்திய கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக நடத்தப்பட்டது.

கோவை GST கூட்டத்தில் தொழில்முனைவோரை அவமானப்படுத்தி, மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலா சீதாராமனின் செயலைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 16-9-2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்வில் திமுக இந்திய கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்டத் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.



கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாநகர் மாவட்ட திமுக அவைத் தலைவர் கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநாயகி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா எஸ்.ஜெயகுமார், மதிமுக ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், சி.பி.ஐ.எம். மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சிவசாமி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குமணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும், திமுக இந்திய கூட்டணிக் கட்சிகளின் நகர, ஒன்றிய, பகுதி, வார்டு, பேரூராட்சி செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...