உடுமலையில் அற்புத அன்னை ஆலய தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை அற்புத அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கிய தேர் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் உள்ள அற்புத அன்னை ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா, பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு செப மாலை, நவநாள், திருப்பலி, சிறப்பு தியான மறையுரை, நற்கருணை ஆராதனை மற்றும் வேண்டுதல் நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதி நாளான நேற்று காலை 8.30 மணிக்கு பங்குப்பெருவிழா திருப்பலி நடைபெற்றது.



இரவு 8 மணிக்கு தேர் பவனி வருதல் நிகழ்ச்சி தொடங்கியது.



அற்புத அன்னை ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர், பள்ளிவாசல் வீதி, தலை கொண்ட அம்மன் வீதி, தங்கம்மாள் ஓடை சாலை, பொள்ளாச்சி-உடுமலை சாலை, தளி சாலை வழியாக சுற்றி வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.



பேண்ட் வாத்தியம் முழங்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேருக்கு முன்பு சிலுவை மற்றும் கைகளில் விளக்கு, மலர்கள் ஏந்தியவாறு பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வின் போது உடுமலை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...