கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றன

கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் கவுண்டம்பாளையம் அருகே உள்ள எஸ்.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் அரினாவில் இரவு-பகல் ஆட்டமாக இரண்டு நாட்கள் நடைபெற்றன. 16 அணிகள் பங்கேற்றன.



கோவை: கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றன. கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கே.என்.ஜி.புதூர் சாய் நகர் எஸ்.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் அரினாவில் கலை பொழுதுபோக்கு அமைப்பின் சார்பில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இரவு-பகல் ஆட்டமாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து 16 தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் போட்டிகளை தொடங்கி வைத்தார். திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை வகித்தார்.



140 அடி அகலம் கொண்ட டர்ஃப் கிரவுண்டில் சுற்றிலும் மற்றும் மேல் பகுதியிலும் வலை அமைக்கப்பட்டிருந்தது.



ஏழு ஓவர் கொண்ட இந்த மேட்ச்களில், பேட்டிங் செய்யும் அணி முதல் ஆறு ஓவருக்குள் டபுள் டமாக்கா என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒரு ஓவரில் ஒரு ரன்னுக்கு இரண்டு ரன்கள் என எடுத்துக் கொள்ள முடியும். ஒரு அணிக்கு ஒன்பது பேர் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ.30,000 பரிசுத் தொகையும் கோப்பையும், இரண்டாவது அணிக்கு ரூ.15,000 பரிசுத் தொகையும் கோப்பையும், மூன்றாவது அணிக்கு ரூ.5,000 பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் மற்றும் சிறந்த பீல்டர் உள்ளிட்ட பல சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், எஸ்.எம்.ஆர். குரூப் எஸ்.ஆர்.மருதாச்சலம், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி பச்சைமுத்து, கற்பகம் ராஜ்சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...