கோவையில் சாலை கடக்க தவித்த மாணவிகளுக்கு உதவிய பெண் காவலர்: வைரலாகும் வீடியோ

கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க தவித்தபோது, பெண் காவலர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவருக்கு பெண் காவலர் ஒருவர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 2327 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றன. இந்நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு கடைசி நேரத்தில் தேர்வெழுத வந்த மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க முடியாமல் தவித்தனர்.



இதனைக் கவனித்த அங்கிருந்த பெண் காவலர், உடனடியாக ஓடிச்சென்று இரண்டு மாணவிகளையும் சாலையைக் கடந்து அழைத்துச் சென்று தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பெண் காவலரின் இந்த உதவி செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. நேரத்தை கருத்தில் கொண்டு மாணவிகளுக்கு உதவி செய்த பெண் காவலரின் செயல் காவல்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...