உடுமலைப் பகுதியில் கார் விபத்து: மூவர் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே அதிவேக கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலப்பம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (52) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகோபால் (50) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் உடுமலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, பழனி நோக்கி வந்த கேரள மாநில கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்களது வாகனத்தின் மீது மோதியது.



நிலைதடுமாறிய கார், அருகில் பஸ்சுக்காக காத்திருந்த உடுமலை வி.ஜி.ராவ் நகரைச் சேர்ந்த சதாசிவம் (75) மற்றும் கோவை மதுக்கரையைச் சேர்ந்த ரங்கசாமி (68) ஆகியோர் மீதும் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



காயமடைந்த மூவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் மற்றும் ரங்கசாமி ஆகியோரும் உயிரிழந்தனர். சதாசிவம் தீவிர சிகிச்சையில் உள்ளார். காரில் பயணித்த குழந்தை உட்பட மூவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.



இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த உடுமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



விபத்து குறித்த தகவலறிந்த பாலப்பம்பட்டி பொதுமக்கள் உடுமலை-பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் வேகத்தடை குறியீடு இல்லாததே விபத்துக்கு காரணம் எனக் குற்றம்சாட்டினர்.



காவல்துறை ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், பாலமுருகன் மற்றும் வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



மறியல் காரணமாக உடுமலை-பழனி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...