கோவை மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி குற்றச்சாட்டு: திமுக-அதிமுக இடையே வாக்குவாதம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் 'ஸ்டிக்கர் ஆட்சி' குற்றச்சாட்டு எழுப்பினார். இதனால் திமுக-அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையர் க.சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், மண்டல குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்தின் போது, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சியில் "ஸ்டிக்கர் ஆட்சி" நடப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை திமுக கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மாமன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அமைதி திரும்பியதும், மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...