மேட்டுப்பாளையம் அருகே ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஏகே செல்வராஜ்

மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் திறந்து வைத்தார். குழந்தைகளுக்கான வசதிகளுடன் கூடிய இந்த மையம் பெற்றோர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் முழுவதுமாக முடிவுற்ற நிலையில், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் புதிய பாத்திரத்தில் பால் பொங்கல் வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது பணிகளைத் துவக்கினர். மேலும், அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களை வைத்து குத்து விளக்கும் ஏற்றப்பட்டது.



புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கண்களைக் கவரும் வகையிலும், கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் விலங்குகள் மற்றும் கார்ட்டூன் படங்கள் சுவர்களில் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளன. இது குழந்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இலுப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய அங்கன்வாடி மையம் அப்பகுதி குழந்தைகளின் ஆரம்பகால கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...