பீளமேடு, சமத்தூர், கோவில்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் பீளமேடு, சமத்தூர், கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மின் வாரிய அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிவிப்பில், நாளை (செப்டம்பர் 12) பீளமேடு, சமத்தூர் மற்றும் கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடுபுதூர், எல்லைத் தோட்டம், வஉசி காலனி, பி.கே.டி.நகர், அகிலாண் டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்பிரமணியம் நகர், பாலகுரு கார்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை(ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சமத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், குன்னத்தூர், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர், கொண்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த மின்தடை அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...