கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி துவக்கம்

கோவை வ.உ.சி. மைதானத்தில் எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ துவங்கியது. ஒன்றரை இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சி, மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.



கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி கண்காட்சி துவங்கியது.



எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி குறித்து, நிறுவனத்தின் உரிமையாளர் சிட்டி பாபு மற்றும் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் விவரங்களை பகிர்ந்து கொண்டனர்.



கோவை மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த கண்காட்சி சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு வழிகாட்டுதல்களின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



கோவையில் இது போன்ற பிரம்மாண்ட கண்காட்சி முதல் முறையாக நடைபெறுவதாக அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.



வெளிநாடுகளில் காணப்படுவது போன்ற இலட்சக்கணக்கான மீன்களைக் கொண்ட சுரங்கங்கள், கடல் கன்னி உள்ளிட்டவை பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.



இந்த கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்குகள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகள் என 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி கோவை மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள் என பல்வேறு வகையான அரங்குகளை கோவை வாழ் மக்கள் காணும் அரிய வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...