கோவை காமராஜபுரத்தில் சிறப்பு தூய்மைப் பணி: கோவை எம்பி, மாவட்ட ஆட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு 69-ல் உள்ள காமராஜபுரத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் சிறப்பு தூய்மைப்பணி (Mass Cleaning) இன்று (11.09.2024) நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர்கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த சிறப்பு தூய்மைப் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.



இவர்கள் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியினை தடுத்தல், டெங்கு கொசு புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், சாலைகளின் இருபுறங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல், மற்றும் களைச்செடிகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார், மத்திய மண்டலத்தலைவர் மீனாலோகு, மக்கள் பிரதிநிதிகள், சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...