திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்தால் பங்கேற்பது குறித்து பரிசீலிப்போம்: அன்புமணி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு, தேசிய கல்விக் கொள்கை, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அவர், "தேசிய கல்வி கொள்கையில் நல்லதும் இருக்கிறது, அதேபோல் மாநிலத்திற்கு பாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. எனவே மத்திய அரசு இதைத் திணிக்கக் கூடாது. கல்வி என்பது மாநில பட்டியலுக்கு வர வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் போதைப் பொருள் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அன்புமணி, "காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்காது. நானும் முதல்வரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் கடமைக்கு முதல்வர் கூட்டம் நடத்தி கண்துடைப்புக்கு சில நடவடிக்கைகள் எடுப்பதாகவும், நேற்று கூட மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் போதைப் பொருள்தான். முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், "10 வருடம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்போதாவது மது ஒழிப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டுள்ளார். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைக்கட்டும், அதில் கலந்து கொள்வது குறித்து அப்போது பார்க்கலாம்," என்றார்.

மேலும் அவர், "தமிழக அரசு சாராயத்தில் கவனம் செலுத்தாமல் ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும், தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். "மாணவர்களுக்கு நீதி போதனை மிகவும் அவசியம். அதில் நல்லது இருக்கிறது. குறிப்பாக சமூக சீர்கேடு விஷயங்கள், எது நல்லது, எது கெட்டது என்பதை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்," என்றும் தெரிவித்தார்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்த கேள்விக்கு, "யார் மாநாடு நடத்தினாலும் காவல்துறையினர் இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை," என்று அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...