முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி போட்டிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போட்டிகள், கோவையில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியாக துவங்கியது.



இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 39,738 பேர் இப்போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 1,449, கல்லூரி மாணவர்கள் 16,809, பள்ளி மாணவர்கள் 18,679, பொதுப்பிரிவினர் 2,167, மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள்) 654 பேர் அடங்குவர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேரு விளையாட்டு அரங்கம், மாநகராட்சி மைதானம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, குமரகுரு தொழில்நூட்ப கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கற்பகம் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தியாகி இராமசாமி நினைவு பள்ளி, இராமகிருஷ்ணா வித்யாலாயா பள்ளி ஆகிய 9 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். தனி விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும் மாநில போட்டிக்கு செல்வர். மாநில அளவிலான போட்டியில் முதல் இடத்திற்கு ரூ.1,00,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000 வழங்கப்படும். மொத்த பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...