தென்னக ரயில்வேயில் முதலிடம் பிடித்த சென்னை மத்திய ரயில் நிலையம்; கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில்

2023-24 ஆம் ஆண்டில் தென்னக ரயில்வேயின் முதல் 10 ரயில் நிலையங்களின் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பட்டியலில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது.


கோவை: தென்னக ரயில்வேயின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 10 ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.

சென்னை மத்திய ரயில் நிலையம் 3.05 கோடி பயணிகளை கையாண்டு ரூ.1300 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1.95 கோடி பயணிகளுடன் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மூன்றாவது இடத்தில் கோவை ரயில் நிலையம் 1.02 கோடி பயணிகளை கையாண்டு ரூ.345 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நான்காவது இடத்தில் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் 1.27 கோடி பயணிகளுடன் ரூ.281 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஐந்தாவது இடத்தில் தாம்பரம் ரயில் நிலையம் 3.27 கோடி பயணிகளை கையாண்டு ரூ.246 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஆறாவது இடத்தில் எர்ணாகுளம் ஜங்ஷன் 88 லட்சம் பயணிகளுடன் ரூ.241 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஏழாவது இடத்தில் மதுரை ரயில் நிலையம் 75 லட்சம் பயணிகளுடன் ரூ.224 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எட்டாவது இடத்தில் கோழிக்கோடு ரயில் நிலையம் 1.14 கோடி பயணிகளுடன் ரூ.190 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் 79 லட்சம் பயணிகளுடன் ரூ.165 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. பத்தாவது இடத்தில் திருச்சூர் ரயில் நிலையம் 69 லட்சம் பயணிகளுடன் ரூ.164 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...