பொள்ளாச்சியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதிய சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை

பொள்ளாச்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவிபாளையம் முதல் மூலனூர் வரையிலான புதிய சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு (கிழக்கு) மற்றும் பொள்ளாச்சி தெற்கு (வடக்கு) ஒன்றியங்களில் இன்று (செப்டம்பர் 10) பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அனுப்பர்பாளையம் ஊராட்சி ஆலம்பாளையம் கிராமத்தில், கனிமம் மற்றும் சுரங்கத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.



மேலும், சின்ன நெகமம் ஊராட்சியில் 2024-2025-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உதவிபாளையம் முதல் மூலனூர் வரையிலான புதிய சாலை அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டங்கள் பொள்ளாச்சி பகுதியின் நீர் மேலாண்மை மற்றும் சாலை இணைப்பு வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும், புதிய சாலை பொள்ளாச்சி மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...