டிசம்பர் 31, 2024-க்குள் 2000-க்கு முந்தைய பிறப்புகளை பதிவு செய்ய வேண்டுகோள் - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் 2000-க்கு முந்தைய பிறப்புகளை டிசம்பர் 31, 2024-க்குள் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு பெயர் பதிவு செய்ய இயலாது என எச்சரித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, 2000-ஆம் ஆண்டிற்கு முந்தைய பிறப்புகளை பதிவு செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவுச்சட்டம் 2000-ன் விதிகளின்படி, 2000-ம் ஆண்டிற்கு முந்தைய பிறப்புகளை டிசம்பர் 31, 2024-க்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு 2000-க்கு முந்தைய பிறப்புகளை நிரந்தரமாக பதிவு செய்ய இயலாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநில அரசால் 25 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இனி மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளின் பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். 2017-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்த இடம் சார்ந்த வார்டு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது, குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஒரு ஆவணம் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் / நற்சான்றிதழ் போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பெயர் பதிவு கால தாமத விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

நடப்பாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தையின் பெயரை கால தாமத பதிவுக் கட்டணமின்றி பதிவு செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய அறிவிப்பை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS வெளியிட்டுள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...