கோவை தனியார் விடுதியில் பகலில் புகுந்து செல்போன் திருடிய நபர் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பகல் நேரத்தில் புகுந்து செல்போன் திருடிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட்மென்ஸ் எனும் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (22) என்பவரின் செல்போன் திருட்டு போனது தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று பிரவீன் குமார் பகலில் விடுதி அறையில் உறங்கியுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது தனது செல்போன் காணாமல் போனதைக் கண்டறிந்தார். விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் மெதுவாக நடந்து வந்து அறைக்குள் சென்று செல்போனை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரவீன் குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

கோவை மாநகரத்தில் ஏற்கனவே இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது பகல் நேரத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருடும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...