உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஜிட்டல் கிராப் சர்வே பணி தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



திருப்பூர்: உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்வாசகம் மற்றும் வட்ட தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தின் செயலாளர் வெற்றிவேல் மற்றும் பொருளாளர் சையது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், டிஜிட்டல் கிராப் சர்வே பணி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, இப்பணிக்கான உபகரணங்கள் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படாதது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், கிராப் சர்வே பணிக்கென தன்னார்வலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காததையும் அவர்கள் கடுமையாக கண்டித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் தலைவர் ரவி, செயலாளர் சீனிப்பாண்டி உள்ளிட்ட பல கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...