மூன்று மணி நேரத்தில் வழிப்பறி வழக்கை கண்டுபிடித்த தடாகம் போலீசார்: வெளி மாநில சிறுவன் கைது

கோவை தடாகம் பகுதியில் 64 வயது பெண்ணின் 10 பவுன் தாலிக்கொடி திருடப்பட்டது. போலீசார் மூன்று மணி நேரத்தில் வழக்கை முடித்து, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை கைது செய்தனர்.



கோவை: கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னிமடை அருகே ஆர்.ஆர் அவென்யூ குடியிருப்பில் நடந்த வழிப்பறி சம்பவத்தை போலீசார் மூன்று மணி நேரத்தில் விரைந்து முடித்துள்ளனர்.

புதிதாக குடிவந்துள்ள சிவசங்கர் மற்றும் அவரது மனைவி பார்வதி (64) ஆகியோர் வீட்டு வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பார்வதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு சஞ்சய் குமார் தப்பியோடினார்.

உடனடியாக தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விரைவான நடவடிக்கையின் மூலம், மூன்று மணி நேரத்திற்குள் சஞ்சய் குமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 10 பவுன் தாலிக்கொடியை மீட்டனர்.

இந்த சிறப்பான செயலுக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போலீஸ் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. பெயர் விலாசம் தெரியாத வெளி மாநில நபர்களை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தானது என்றும், அவ்வாறு அமர்த்தும் பட்சத்தில் அவர்களின் முறையான ஆவணங்களை பெற்று வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கண்காணிப்புக்காக சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...