உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி பொள்ளாச்சி நகர திமுக தீர்மானம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நகர திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பவள விழா கொண்டாட்டம் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும், விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றி, வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.



திமுக தலைமை அறிவித்தபடி திமுக பவள விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கௌதமன், நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...