அன்னூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு: ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக ஓடியது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்தது. அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரியம்பாளையம் பகுதியில் இருந்து பிள்ளையப்பன்பாளையம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

முதலில் சிறிய அளவில் இருந்த உடைப்பு, பின்னர் தண்ணீர் அழுத்தத்தால் பெரிதாகி, சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீச்சி அடித்தது. இதன் காரணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி, சாலையோரங்களில் சென்று சாக்கடையில் கலந்து ஓடியது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தற்போது, குழாய் உடைப்பை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...