ஆனைமலை தென்னை நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

ஆனைமலை அருகே ஆழியாற்றில் உள்ள தோட்டக்கலைத் துறையின் தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை மற்றும் குட்டை ரக கலப்பின தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: ஆனைமலை அருகே உள்ள தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் தென்னை நாற்றுப் பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, ஆனைமலை அருகே ஆழியாற்றில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் இயங்கும் தென்னை நாற்றுப்பண்ணையில் வளர்க்கப்படும் நெட்டை, குட்டை ரக கலப்பின நாற்றுகள் தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

விற்பனை விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள அவர், நெட்டை ரக கன்றுகள் ஒன்று ரூ.65க்கும், கலப்பின ரக கன்றுகள் ஒன்று ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். தென்னங்கன்றுகள் வாங்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆனைமலை தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...