கோவையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காதல் விவகாரம் காரணமா?

கோவையில் தனியார் கல்லூரியில் பி.இ படித்து வந்த 23 வயது மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் இந்திரஜித் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரஜித்தின் தாயார் பபிதா (42) ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்திரஜித் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

சமீப காலமாக இந்திரஜித் கோத்தகிரியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அவரது தாயார் பபிதா அதனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த இந்திரஜித், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கத்தியால் தனது கையில் வெட்டிக்கொண்டு தாயாரை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த இந்திரஜித், நேற்று (செப்டம்பர் 7) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், இந்திரஜித்தின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திரஜித்தின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...