கோவையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காதல் விவகாரம் காரணமா?

கோவையில் தனியார் கல்லூரியில் பி.இ படித்து வந்த 23 வயது மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் இந்திரஜித் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரஜித்தின் தாயார் பபிதா (42) ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்திரஜித் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

சமீப காலமாக இந்திரஜித் கோத்தகிரியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அவரது தாயார் பபிதா அதனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த இந்திரஜித், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கத்தியால் தனது கையில் வெட்டிக்கொண்டு தாயாரை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த இந்திரஜித், நேற்று (செப்டம்பர் 7) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், இந்திரஜித்தின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திரஜித்தின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...