கோவையில் பாறு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்

கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி, எம்பி கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் விழிப்புணர்வு வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். இந்த பிரசாரம் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி 800 கி.மீ. தொலைவு பயணிக்கும்.


கோவை: கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் செப்டம்பர் 7 அன்று தொடங்கியது. கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை பாறு கழுகுகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.



இதையொட்டி, அருளகம் அமைப்பின் சார்பில் இந்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை வஉசி பூங்காவிலிருந்து தொடங்கிய இந்த வாகனப் பிரசாரத்தை எம்பி கணபதி ப.ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசு கானுயிர் வாரிய உறுப்பினர் ஓசை கே.காளிதாசன் மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத்துணைத் தலைவர் நா.மணிசுந்தர் ஆகியோர் பாறு கழுகுகள் இனத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினர்.



அருளகம் அமைப்பின் நிறுவனர் சு. பாரதிதாசன் கூறுகையில், "தமிழகம் முழுக்க வலம் வந்த பாறு கழுகு பறவைகள் தற்போது கோவை, நீலகிரி, முதுமலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தஞ்சமடைந்து சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன. இவ்வினம் அழிவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தது இறந்து போன கால்நடைகளில் இருந்த டைக்குளோபினாக் வலி போக்கி மருந்தின் தாக்கம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசு டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைத் தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இறந்த விலங்குகளின் விஷம் தடவப்பட்ட சடலங்களை உண்டதாலும், இறந்த விலங்குகளைப் புதைத்ததால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாகவும் அதிக அளவில் பாறு கழுகுகள் உயிரிழந்துள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த வாகனப் பிரசாரம் கோவையில் தொடங்கி ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி தற்போது பாறு கழுகுகள் வலம் வரும் பகுதிகளைச் சுற்றிலும் சுமார் 800 கி.மீ. தொலைவுக்கு செல்ல உள்ளதாக பாரதிதாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...