கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா கொண்டாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாதா வேடங்களில் பவனி வந்தனர். "ஒளியின் விதை" கத்தோலிக்க மின்னிதழும் துவக்கப்பட்டது.


கோவை: கோவை மறைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆலயத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலவிதமான மாதா வேடங்களில் அலங்காரம் செய்துகொண்டு பவனியாக வந்தனர். இத்துடன் மாதாவின் வேண்டுதல் தேர் பவனியும் நடைபெற்றது.



மேலும் "ஒளியின் விதை" என்ற கத்தோலிக்க மின்னிதழும் இன்று சிறப்பாக துவங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில், டான் போஸ்கோ எக்சல்லேன்ஸ் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருட்தந்தை பெர்னான்டு மோசஸ் அவர்களும் புனித ஜான் போஸ்கோ ஆலயப் பங்குத்தந்தை ததேயு சைமன் கென்னடி அவர்களும் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினர்.



இவ்விழாவில் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தின் பங்கு மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...