கோவை யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. 5000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் விமான உதிரி பாகங்கள் மற்றும் ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் இன்ஜினீரியர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். கோவை CRPF கமாண்டர் ஆண்டனி பென்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

தனது உரையில் ஆண்டனி பென்சன், மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சி.ஏ.எம். கைலாஷ் குமார் மற்றும் செயலாளர் வி. அருண் கார்த்திகேயன் ஆகியோர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர்.



கண்காட்சியின் சிறப்பம்சமாக விமானங்களின் மாதிரிகள், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வாகனங்களின் அணிவகுப்பு, ரேடியோ கட்டுப்பாட்டில் இயங்கும் சிறிய ரக விமானங்களின் மாதிரிகள் மற்றும் ட்ரோன்களின் செயல்பாடு, விமானங்களின் செயல்முறை விளக்கம், மாதிரிகளை இயக்கும் வாய்ப்பு, ஆளில்லா விமானங்களை செயல்படுத்தும் விமானிகளுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு ஆகியவை இடம்பெற்றன.



இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியை 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 4000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...