கோவை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டம்

கோவை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்து அமைப்புகள் சார்பாக மகாராஜா விநாயகர், சிங்க விநாயகர், அன்னபறவை விநாயகர், மாப்பிள்ளை விநாயகர், மயில் விநாயகர், நீர் வீழ்ச்சி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் ஒரு பகுதியாக, கோவையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ரங்கம்மாள் காலனி, வெள்ளகிணர், உருமாண்டம்பாளையம், தடாகம், கணுவாய், பன்னிமடை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக விழா கொண்டாடப்பட்டது.



நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் ராஜஸ்தானி அரண்மனை போன்ற அலங்கார அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வாராகி மணிகண்ட சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, தக்காளி சாதம், புளி சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டன. ஹிந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, பாரத் சேனா, விவேகானந்தர் இளைஞர் பேரவை, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்த கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...