அன்னூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் விநாயகர் சிலை பிரதிஷ்டை: அர்ஜுன் சம்பத் பங்கேற்பு

அன்னூரில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் சிலையை பிரதிஷ்டை செய்தார் அர்ஜுன் சம்பத்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அன்னூர் பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கடிதம் கொடுத்து வந்தனர். ஆனால், புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலை வைக்க அரசு அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.



இதனை எதிர்த்து, கடந்த வாரம் அன்னூர் பேருந்து நிலையம் முன்பு அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் இந்து மக்கள் கட்சியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விநாயகர் சதுர்த்தி நாள் வரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி குட்டி ராஜேந்திரனின் வீடு அமைந்துள்ள அன்னூர் ஏ எம் பாளையம் பகுதியில், அவரது வீட்டில் ஆறு அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலைக்கு வழிபாடு நடத்தப்படும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்தால் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய அன்னூர் போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், வீட்டிலேயே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதால் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...