மடத்துக்குளம் அருகே கிரஷர்களால் பாதிப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மடத்துக்குளம் அருகே தூங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று உடுமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார்.



உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். தென்னை மரங்களை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது, உடுமலை கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாதது, நடமாடும் கால்நடை வாகனத்தில் மருந்துகள் இருப்பு இல்லாதது போன்ற பிரச்சினைகளை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு, புதிய பஸ் நிலையத்தின் காம்பவுண்ட் சுவர் பாதையை அடைப்பது, சங்கர்நகர், எஸ்.வி.புரம், எஸ்.எஸ். காலனி பகுதிகளில் முகமூடி அணிந்த நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளையும் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.



உடுமலை பிஏபி கால்வாயின் கரையில் கழிவுகள் கொட்டப்படுவது, உடுமலை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாதது, வாகன நெருக்கடி, கமிஷன் முறை பிரச்சினைகள், உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மடத்துக்குளம் அருகே தூங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மடத்துக்குளம் மைவாடி பகுதியில் அரசு ஊழியருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாட்டு கொட்டகை மற்றும் கிணறு அமைக்கப்பட்டது குறித்தும், உடுமலை மற்றும் மடத்துக்குளம் நில அளவைத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...