அன்னூர் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அன்னூர் அருகே பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் கிராமத்தில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் பகுதியில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அம்மா செட்டி புதூர் பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதியாக திகழ்கிறது. இது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியாகவும் உள்ளது. அண்மையில் இங்கு இடம் வாங்கிய தொழிலதிபர் காஸ்டிங் அல்லது இரும்பு ஆலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



ஆலைக்கு முன்னோட்டமாக ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் சாலை ஓரத்தில் உள்ள நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை அமைப்பதாக குற்றம்சாட்டி அம்மா செட்டி புதூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலம் காலமாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையையும், மழை காலங்களில் மழை நீர் வழிந்தோடும் நீர் வழிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து தனியார் ஒருவர் லாப நோக்கில் செயல்படுவதை தடுக்க வலியுறுத்தி கட்டுமான பணிகளை தடுக்கும் நோக்கில் கட்டுமானங்களுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சுற்றுச்சுவர் அமைக்க சட்டவிரோதமாக சுமார் 20 அடிக்கும் மேல் திறந்த வெளியில் ஆழ்குழாய் கிணறு போன்று குழிகள் அமைக்கப்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் குழந்தைகள் வைத்திருப்போர் அச்சமடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...