உடுமலையில் விநாயகர் சிலை விற்பனை மந்தம்: தொழிலாளர்கள் கவலை

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன்னதாக, விநாயகர் சிலை விற்பனை மந்தமாக உள்ளது. கடந்த ஆண்டை விட விற்பனை குறைவாக இருப்பதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வரும் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாக்பவுடர், தேங்காய் மஞ்சி கொண்டு அச்சில் வார்த்து சிலைகளை வடிவமைத்து வர்ணம் பூசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.

வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்களைக் கவரும் அழகில் மனதை ஈர்க்கின்றன. ரூ.100 முதல் ரூ.10,000 வரையில் உயரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, உடுமலை பகுதியில் உள்ள சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.



ஆனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைவாக உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விற்பனை அதிகரித்து தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...