விநாயகர் சதுர்த்தி: மேட்டுப்பாளையத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஆய்வு

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஆய்வு செய்தார். பொதுக்கூட்டம், சிலை கரைப்பு, ஊர்வலப் பாதைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.


கோவை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஐபிஎஸ் இன்று (செப்டம்பர் 3) மேட்டுப்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அவர் பார்வையிட்டார். மேலும், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ள பவானி ஆற்றுப் பகுதியையும், ஊர்வலம் செல்லும் பாதைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது டிஎஸ்பி பாலாஜி, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் ஐஜி செந்தில் குமார், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஐஜி செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...